img img img img img img img img img img img img img img img img

உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ள போவதில்லை! மகிந்த ராசபக்ச

  
 


முன்னாள் அதிபரும் பொதுசன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராசபக்ச,  பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகை வழிபட்டின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராசபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராசபக்ச, பசில் ராசபக்ச உள்ளிட்டோரே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  மேலும், அவர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பில் மகிந்த ராசபக்ச தெரிவிக்கையில்,

உயர்நீதிமன்ற உத்தரவை யாராலும் மீற முடியாது அதனை எதிர்க்கவும் முடியாது. அதனை நாம் மதிக்க வேண்டும். எனினும், உயர் நீதிமன்ற தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்ள போவதில்லை. எனது தரப்பிலான கருத்துக்களை நீதிமன்றில் முன்வைக்க வாய்ப்பு கிடைக்குமென நினைக்கிறேன்.என்றார். அதேவேளை, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பதாகவும் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது அதனை தோல்வியடைய செய்வதற்கான தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்க நாம் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
பாடல் : மண் மீட்க சென்றவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்கள்..... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : சித்தன் தெ.ஜெயமூர்த்தி, சினேகா குமரன்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்