img img img img img img img img img img img img img img img img

இமய மலைக்கு பயணம் செல்லவுள்ள நடிகர்..

  
 


நடிகர் ரஜினிகாந்த் இமய மலைக்கு பயணம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் கலவை விமர்சனங்களை பெற்றது. இதனால் அடுத்து வரவுள்ள ஜெயிலர் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். பீஸ்ட் படம் சறுக்கலை ஏற்படுத்திய நிலையில் அதன் இயக்குனர் நெல்சன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஜெயிலர் படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படம் முழுமையாக தயாரான பின்னர் அதனை பார்த்து விட்டு ரஜினிகாந்த் இமய மலைக்கு செல்வார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு படம் முடிந்த பின்னரும் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். 2010-க்கு பின்னர் அவரது உடல்நிலை சற்று பாதிக்கப்பட்ட நிலையில, மீண்டும் அவர் 2018 இல் காலா, 2.0 படங்களை முடித்துக் கொண்டு இமயமலைக்கு சென்றார். பின்னர் கொரோனா தாக்கம் ஏற்பட்டதால் பயணத்தை தவிர்த்தார் ரஜினிகாந்த். ஜெயிலர் படம் முடிந்திருப்பதை தொடர்ந்து சமீபத்தில் ரஜினி மாலத்தீவு சென்றுவந்தார்.

இதுதொடர்பான படங்கள் கவனம் பெற்றன. இந்நிலையில் ஜெயிலர் படம் முழுமை பெற்ற பின்னர் அதனை பார்த்து விட்டு ரஜினி ஆகஸ்ட் 6, 7 தேதிகளில் இமயமலைக்கு செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
பாடல் : மண் மீட்க சென்றவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்கள்..... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : சித்தன் தெ.ஜெயமூர்த்தி, சினேகா குமரன்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்