விஜய் சேதுபதி நடித்துள்ள "யாதும் ஊரே யாவரும் கேளிர்" படத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்து பாராட்டியுள்ளார். மறைந்த இயக்குனர் எஸ்.பி.சனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் கிருஷ்ணா ரோஹந்த் என்பவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இதில் நில அரசியலை மையமாக வைத்து படமாக்கப்பட்டு இருக்கிறதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான வேலைகள் முடிவடைந்து இந்த வாரம் வெளியாகிறது. இந்த நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தை பல அரசியல் தலைவர்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த திரைப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகர் ராஜேஷ், மேகா ஆகாஷ், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் கரு. பழனியப்பன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news