img img img img img img img img img img

பலத்த காயத்திலிருந்து குணமடைந்து வருகிறேன் என விஜய் ஆண்டனி ட்வீட்!

  


இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தான் குணமாகி வருவதாக தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டணி நடிப்பில், இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு அவரின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதனை விஜய் ஆண்டனியே இயக்கியும் வருகிறார்.

இந்நிலையில் மலேசியாவில் நடந்த படப்பிடிப்பின்போது, அவருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சென்னையில் சிகிச்சைப் பெற்று வரும் விஜய் ஆண்டனி, தனது உடல்நலம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


    Dear friends, I am safely recovered from a severe jaw and nose injury during Pichaikkaran 2 shoot in Malaysia.
    I just completed a major surgery.
    I will talk to you all as soon as possible😊✋
    Thank you for all your support and concern for my health🙏❤️ pic.twitter.com/YJm24omxrS

    — vijayantony (@vijayantony) January 24, 2023

அதில், “அன்பு நண்பர்களே, மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட பலத்த காயத்தில் இருந்து நான் குணமடைந்து வருகிறேன். தற்போது நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன். கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும், எனது உடல்நிலையில் அக்கறை காட்டியதற்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜய் ஆண்டனி விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்