img img img img img img img img img img

21 ஆண்டுகளின் பின்னர் இந்தியாவுக்கு கிடைத்த திருமதி உலக அழகி பட்டம்...

  


அமெரிக்காவில் திருமணமான பெண்களுக்கான உலக அழகிப்போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள வெஸ்ட்கேட் லாஸ் வேகாஸ் ரிசார்ட் எனும் சொகுசு விடுதியில் நடைபெற்றிருந்தது.

இவ்வாண்டுக்கான திருமணமான பெண்களுக்காக "திருமதி உலக அழகி (மிஸஸ் வேர்ல்டு)" போட்டியில் இந்திய பெண் தேர்வாகியுள்ளார். திருமணமான பெண்களில் சிறந்த அழகியை தெரிவு செய்யும் இந்த போட்டிக்கு 63 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்குபெற்றுயிருந்தனர்.

32 வயதான சர்கம் கவுசல் எனும் இந்திய பெண்ணும் குறித்த போட்டியில் கலந்துகொண்டிருந்தார்.  சர்கம் கவுசலுடன் பாலினேசியா நாட்டின் அழகி மற்றும் கனடா நாட்டின் அழகி ஆகியோர் இறுதிப்போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.இதில் இந்திய அழகியான சர்கம் கவுசல் சிறந்த அழகியாக தெரிவாகி முதலாம் இடத்திற்கான கிரீடத்தை சுவீகரித்ததுடன், பாலினேசியா மற்றும் கனடா அழகிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்டனர். இது 21 ஆண்டுகளின் பின்னர் இந்தியாவுக்கு கிடைத்துள்ள திருமதி உலக அழகி பட்டமாகும்.

இதற்கு முன் இந்தியா சார்பில் 2001 ம் ஆண்டு அதிதி கவுரிகர் எனும் பெண் குறித்த மகுடத்தை வெற்றி பெற்றிருந்தார்.  இவருக்கான கிரீடத்தை கடந்த ஆண்டுக்கான திருமதி உலக அழகி சாலின் போர்டு சூட்டி கெளரவித்தார். இந்தியாவையும், உலகத்தையும் நேசிக்கிறேன் என வெற்றி குறித்து திருமதி உலக அழகி சர்கம் கவுசல் சமூக வலைத்தளங்களில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் காசுமீரின் சம்முவை சொந்த இடமாக கொண்ட சர்கம் கவுசல் இந்திய கடற்படை அதிகாரியான அடி கவுசல் என்பவரை 2018 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்