img img img img img img img img img img img img img img img img

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை டிசம்பர் இரண்டாம் வாரம் வெளியிட பேச்சுவார்த்தை..

  
 


டிசம்பர் இரண்டாம் வாரம், வடிவேல் நடித்திருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

தலைநகரம், மருதமலை, படிக்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ் தற்போது வடிவேலு நடிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தை டிசம்பரில் ரிலீசு செய்வதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தை தணிக்கைக்கு அனுப்பி உள்ளனர். 2 மணி நேரம் 20 நிமிடம் ஓடக்கூடிய வகையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சுராஜ். இந்த திரைப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட முதலில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன. ஆனால் ஒரு சில காரணங்களால் நவம்பர் மாதத்தில் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஆலோசனைத்து வருகிறது. இது குறித்த பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

படத்திற்கு தணிக்கை கிடைத்தவுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வடிவேலு - சுராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சந்தோசு நாராயணன் இசையமைத்துள்ளார். வடிவேலு நான்கு பாடல்களை  பாடியுள்ளார்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
பாடல் : மண் மீட்க சென்றவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்கள்..... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : சித்தன் தெ.ஜெயமூர்த்தி, சினேகா குமரன்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்